THE FIRST LINE OF DEFENCE
அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது 3593 மில்லியன் ரூபாய்க்கு மேல் வீதி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) கொண்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகொன்றுடன் ஆறு சந்தேக நபர்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பல் சமுத்திரரக்ஷாவால் ஏப்ரல் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று (2023 ஏப்ரல் 17,) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த போதைப்பொருள் பரிசோதனையில் கலந்து கொண்டார்.
17 Apr 2023
Read more >
யாழ்ப்பாணம், மாதகல் கரையோரப் பகுதியில் மற்றும் குறித்த கரையோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
29 Mar 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இன்று (2023 மார்ச் 23) காலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைதீவு மற்றும் கோவிலன் பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Mar 2023
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நலீன் ஹேரத் எழுதிய ‘Story of the World: Geopolitical Alliances and Rivalries Set in Stone’ என்ற நூலின் பிரதியொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடற்படைத் தலைமையகத்தில் இன்று (21 மார்ச் 2023) வழங்கப்பட்டது.
22 Mar 2023
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கௌரவ திருமதி Rita Giuliana MANNELLA அவர்கள் இன்று (2023 மார்ச் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
17 Mar 2023
2023 மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா ஆகியோர் தலைமையில் இன்று (2023 மார்ச் 11) வெலிசறை கடற்படை வளாகத்தில் விசேட மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
12 Mar 2023
இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.
05 Mar 2023
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக 2023 பெப்ரவரி 25 ஆம் திகதி இலங்கைக்கு வந்த அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Admiral Muhammad Amjad Khan Niazi) தனது நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (பிப்ரவரி 28, 2023) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பாகிஸ்தானுக்குப் புறப்பட்டார்.
28 Feb 2023
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி இன்று (2023 பிப்ரவரி 25,) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
25 Feb 2023
75 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (2023 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2023