நிகழ்வு-செய்தி

கடற்படையின் விநியோகச் சங்கிலியில் புதிய திறன்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுடன், 'விநியோக மாநாடு - 2026' வெற்றிகரமாக நிறைவடைந்தது.

நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறி எண் 10 இனால் ஏற்பாடு செய்யப்பட்ட 08 வது 'விநியோக மாநாடு' -2026’, “A Thriving Nation, A Beautiful Life” என்ற கருப்பொருளின் கீழ், ‘Clean Logistics 2030: Advancing end-to-end Logistics Excellence in Sri Lanka through Digital Advancement, Green Transformation and Transparent Supply Chain Governance’ தொடர்பான கலந்துரையாடல் 2026 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டாராவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

25 May 2026

தேசிய போர் வீரர்கள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களைச் சந்தித்தார்

மே 19 ஆம் திகதி தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2026 மே 22) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) தங்கியுள்ள கடற்படைப் போர் வீரர்களைச் சந்தித்தார்.

22 May 2026

வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன், அத்தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 மே 22) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையானது, கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் “ITS GIOVANNI DELLE BANDE NERE” கப்பலுக்கு கடற்படை வழியனுப்பு விழாவை நடத்தியது.

22 May 2026

கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்

2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன் லங்கா” (CLEAN SRI LANKA)ஒரு பகுதியாக, கடல் மற்றும் கடலோர மண்டலத்தில் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் மற்றொரு நிகழ்ச்சி, 2026 மே 19 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

22 May 2026

வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்

வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார்.

22 May 2026

கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தானத்திட்டங்கள்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஒன்று (01) 2026 மே 19 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

21 May 2026

ஜனாதிபதியின் ஆதரவுடன் பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லை போர் மாவீரர் நினைவிடத்திற்கு முன்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவர் திரு அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

20 May 2026

கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.

13 May 2026

'தித்வா' புயலின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்

‘தித்வா’ புயலின் போது தேசியப் பேரிடர் மேலாண்மை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விழா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில், 2026 மே 08 அன்று கடற்படைத் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.

11 May 2026

தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது

இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரு கடற்படைப் படகு மூலம் அவசரமாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காகக் கடற்படையால் 2026 மே 08 அனுப்பப்பட்டார்.

10 May 2026