நிகழ்வு-செய்தி

இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த மாலுமிகளும், 2026 ஏப்ரல் 21 முதல் 28 வரை கொழும்பு கடற்பகுதியில் சுழியோடி பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

04 May 2026

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது

இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி அந்த நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது.

04 May 2026

பயிற்சித் திட்டத்திற்காக தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படை கப்பலான ‘INS NIREEKSHAK’ தீவிலிருந்து புறப்படுகிறது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்து, பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் 2026 ஏப்ரல் 28 அன்று தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘INS NIREEKSHAK’ கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

29 Apr 2026

இலங்கை கடற்படையின் 263 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 373 பயிற்சி மாலுமிகள் கடற்படை சேவையில் இணைத்தனர்

இலங்கை கடற்படையின் 263 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் இருநூற்று முப்பது (230) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து மூன்று (143) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று எழுபத்து மூன்று (373) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலி, பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படைக் கப்பல் நிபுனவின் தளபதியும் கட்டளை அதிகாரியுமான கெப்டன் ரசிக பியசேனவின் அழைப்பின் பேரில், சுகாதார மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ஜனக மாரபகே, இந்தப் வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

28 Apr 2026

கடற்படைத் தளபதி, வடமேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் செயல்பாடுகள், நல்வாழ்வு மற்றும் விவசாயத் திட்டங்களைப் பார்வையிட்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இக் கட்டளையின் நிர்வாக, நலன் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டதோடு, அச்செயல்பாடுகளை மேலும் திறமையாகவும் செயல்திறனுடனும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

23 Apr 2026

பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக இன்று காலை (2026 ஏப்ரல் 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.

21 Apr 2026

நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது

2026 ஏப்ரல் 15 ஆம் திகதி நல்லெண்ணப் பயணமாக தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல், தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

19 Apr 2026

இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர அணிவகுப்பு நடைபெற்றது

நல்லெண்ணப் பயணமாகத் தீவிற்கு வருகை தந்த இந்தோனேசியக் கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பலின் குழுவினர் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் பங்கேற்புடன், 2026 ஏப்ரல் 16 அன்று காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சியும் நகர அணிவகுப்பும் நடைபெற்றது.

19 Apr 2026

வடக்குப் பிராந்தியத்தில் உள்ள மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடற்படை உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது

இலங்கைக் கடற்படையானது, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, 2026 ஏப்ரல் 09 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மைலடி மீன்பிடித் துறைமுகத்தில், மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடலில் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அத்தியாவசிய உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

16 Apr 2026

கடற்படை பொது மருத்துவமனையின் உள்நோயாளிகளின் நலனுக்காக கடற்படை சங்கத்தால் வழங்கிய நன்கொடை

இலங்கை கடற்படை சங்கம், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதியன்று, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மருத்துவமனை வளாகத்தில் நன்கொடையாக வழங்கியது.

16 Apr 2026