நிகழ்வு-செய்தி

சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன

இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இருபத்து நான்கு (24) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

11 Apr 2026

தென்கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி

இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் படுகாயமடைந்திருந்த ஒரு மீனவரை, 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி காலையில், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து, இலங்கை கடற்படையினரால் சிகிச்சை அளிப்பதற்காக அவசரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

10 Apr 2026

கடற்படையால் நிறுவப்பட்ட 1153வது நீர் சுத்திகரிப்பு நிலையம் அனுராதபுரத்தில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 08 ஏப்ரல் 2026 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

10 Apr 2026

ஜிசிஇ உயர்நிலை, சாதாரண நிலை மற்றும் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகளில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்

2024 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர் நிலை, சாதாரண நிலை மற்றும் 2025 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சி பெற்ற, பணிபுரியும் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் ஐந்நூற்று ஐம்பத்திரண்டு (552) பிள்ளைகளுக்கு, கடற்படை நலநிதியின் பங்களிப்புடன் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடாவின் தலைமையில், பதின்மூன்று (13) கல்வி உதவித்தொகை பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை பணப் பரிமாற்றச் சீட்டுகள் அடையாளப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு 06 ஏப்ரல் 2026 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

08 Apr 2026

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் நாகதீப புராண ரஜ மகா விகாரையில் சமய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன

யாழ்ப்பாணம் நயினாதீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நாகதீப புராண ராஜ மகா விகாரையில் 2026 ஏப்ரல் 02 மற்றும் 03 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற சமய நிகழ்ச்சிகளுக்கு இலங்கை கடற்படை தனது பக்தி ஆதரவை வழங்கியது. அதன்படி, நாகதீப புராண ராஜ மகா விகாரையின் தலைமைப் பொறுப்பாளரும், வட இலங்கையின் தலைமை சங்கநாயக்கருமான வணக்கத்திற்குரிய நவதகல பதுமகிதி திஸ்ஸ தேரர் அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரிலும், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 02 ஏப்ரல் 2026 அன்று இரவு ஒரு இனிமையான பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதன் பின்னர், 03 ஏப்ரல் 2026 ஆம் திகதி வணக்கத்திற்குரிய சங்கத்தின் முப்பது (32) உறுப்பினர்களுக்கு தானம் வழங்கப்பட்டன.

07 Apr 2026

கடற்படையின் பங்களிப்புடன், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள UCT இறங்குத்துறையில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை, இலங்கை கடற்படையானது 31 மார்ச் 2026 அன்று கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஒற்றுமை கொள்கலன் முனைய (UCT) இறங்குதுறையில் வெற்றிகரமாக நடத்தியது.

07 Apr 2026

கடற்படை கௌரவங்களுக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கைக் கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க, இன்று (06 ஜனவரி 2026) கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

06 Apr 2026

ஹம்பந்தோட்டை துறைமுக வளாகத்திற்குள் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அபாயங்கள் குறித்த வெற்றிகரமான பயிற்சி ஒத்திகையை கடற்படை நடத்தியது

2026 ஆம் ஆண்டு மார்ச் 04 முதல் 13 வரை, காவன்திஸ்ஸ என்ற இலங்கை கடற்படைக் கப்பலிலும், ஹம்பந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தின் கொள்கலன் முற்றத்திலும், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை இலங்கை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.

06 Apr 2026

கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கல்நேவயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது

பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுரம் நேகம சிறிசுமன வித்யாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 மார்ச் 27 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

31 Mar 2026

அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்

சீனக் கொடி ஏற்றப்பட்ட வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து செயல்பட்ட ஒரு கடற்படைக் கப்பலால் 2026 மார்ச் 27 ஆம் திகதி கரைக்கு விரைவாக அழைத்து வரப்பட்டு, கப்பலின் உள்ளூர் பிரதிநிதி அலுவலகத்தின் உதவியுடன் சிகிச்சைக்காக காலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உட்படுத்தப்பட்டார்.

28 Mar 2026