கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 3593 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது 3593 மில்லியன் ரூபாய்க்கு மேல் வீதி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) கொண்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகொன்றுடன் ஆறு சந்தேக நபர்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பல் சமுத்திரரக்ஷாவால் ஏப்ரல் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று (2023 ஏப்ரல் 17,) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த போதைப்பொருள் பரிசோதனையில் கலந்து கொண்டார்.

17 Apr 2023