THE FIRST LINE OF DEFENCE
இந்த மாதம் 19 ஆம் திகதி முதல் கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்ற இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2020 இன்று (2020 அக்டோபர் 21) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
21 Oct 2020
Read more >
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து மன்னார் ஒலுதுடுவாய் பகுதியில் இன்று (2020 அக்டோபர் 18) மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 200 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
19 Oct 2020
இலங்கைக்கு சொந்தமான கடல் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விலைமதிப்பற்ற சேவையின் பின்னர் கடற்படையில் இருந்து விடைபெறும் இலங்கை கடற்படையின் மூன்றாவது வேக ரோந்து படகுகள் படையின் இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' மற்றும் 'ஜகதா' ஆகிய இரண்டு கப்பல்களுக்கு கடற்படை பாரம்பரியமாக மரியாதை செலுத்தி கடற்படை சேவையில் இருந்து அகற்றும் விழா 2020 அக்டோபர் 12 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.
13 Oct 2020
திருகோணமலை தெற்கு சாம்பூர், இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் இன்று (2020 ஆகஸ்ட் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
12 Oct 2020
கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் ஆற்றில் வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை வீரர்கள் கடந்த அக்டோபர் 05 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.
09 Oct 2020
பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படை இன்று (2020 அக்டோபர் 07) கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தியது.
07 Oct 2020
முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்ட சமயம் உயிர்நீர்த்த, அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கருத்திக்கொண்டு ரணவிரு சேவை அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை 2020 ஒக்டோபர் மாதம் 03 திகதி காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை பாதுகாப்பு செயளாலர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் சாலியபுர கஜபா ரெஜிமன்ட் தலைமையகத்தில் நடைபெற்றது.
05 Oct 2020
மன்னார் தால்பாடு கடற்கரையில் 2020 அக்டோபர் 02 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 902 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
03 Oct 2020
முப்படை, காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிர் இழந்த, ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுடைய குடும்ப உருப்பினர்களின் நலனுக்காக நடமாடும் சேவையொன்று கெளரவ பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, முப்படை தளபதிகள் மற்றும் செயல் பொலிஸ் மா அதிபர் தலைமையில் 2020 அக்டோபர் 03 ஆம் திகதி 0800 மணி முதல் 1700 மணி வரை அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடத்த ரணவிரு சேவா அதிகாரசபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
02 Oct 2020