செய்தி வெளியீடு


“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 06 அன்று 1830 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை முந்தைய நாள் (2020 செப்டம்பர் 6,) மாலை 1500 மணியளவில் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களால் முடிந்தது. இருப்பினும், கப்பலுக்குள் அதிக வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மீண்டும் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காரணத்தினால் பேரழிவு மேலாண்மைக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கப்பலை குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

07 Sep 2020