‘கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2025’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

'கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2025' தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் 2025 மே 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அங்கு ஆண், பெண் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கடற்படை கட்டளை வென்றது.

இந்தப் போட்டியின் தடகளப் போட்டிகளில் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீர ,வீராங்கனைகள் பங்கேற்றனர். அதன்படி, சிறந்த திறமையை வெளிப்படுத்திய பயிற்சி கடற்படை கட்டளை, ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், மேற்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் பயிற்சி கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் மேற்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தைப் பிடித்தது. "கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2025" இல் சிறந்த பெண் தடகள வீராங்கனையாக டி.எம்.ஐ. சதுரி விருதை வென்றார், மேலும் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை என்.எம்.ஜி. தத்சர வென்றார்.

மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டியினால் கடற்படை வீரர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நிலையாக பராமரிக்கவும், இதன் மூலம் கடற்படை தனது கடமைகள் மற்றும் பணிகளை திறமையாகவும் வினைத்திறனாகவும் செய்வதற்கும், திறமையான விளையாட்டு வீரர்களை நாட்டிற்காக உருவாக்க முடியும் என்றும் கடற்படை நம்புகிறது.