இன்டர் கிளப் முதல்தர மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்டர் கிளப் முதல் தர (TIRE B) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை 12 கழகங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது, இதில் இலங்கை கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா போட்டித்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி, கடற்படை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வலது கை துடுப்பாட்ட வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா, போட்டித்தொடரின் 05 போட்டிகளில் ஒரு சதத்துடன் 223 ஓட்டங்களையும் 55.75 துடுப்பாட்ட சராசரியும் பெற்று போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா விமானப்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 142 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பெற்றார். இது ஒரு போட்டியில் பெற்ற அவரது சிறந்த ஆட்டத்தை குறிக்கிறது.

மேலும், போட்டியின் பரிசளிப்பு விழா ஒக்டோபர் 09 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டியின் குழு உறுப்பினர் திரு.தினால் தெவரப்பெரும தலைமையில் நடைபெற்றது.