இண்டர் கிளப் முதல்தர மூன்று நாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் பட்டத்தை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க வென்றுள்ளார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இண்டர் கிளப் முதல்தர (TIRE B) மூன்று நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் 28 ஜூன் 2024 முதல் 15 செப்டம்பர் 2024 வரை 12 விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை அணியின் கடற்படை வீர்ர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க போட்டித்தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன்படி, கடற்படை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் கடற்படை வீர்ர் ஜி.எல்.ஏ.எல் மதுசங்க போட்டித்தொடரில் 11 போட்டிகளில் 351 ஓவர்கள் மற்றும் 03 பந்துகளை வீசி 88 மெய்டன் ஓவர்களுடன் 995 ஓட்டங்களுக்கு 77 விக்கெட்டுகளை பெற்று சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டியின் போது சிறந்த பந்துவீச்சாக, அவர் செபஸ்டியன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 15.2 ஓவர்கள் வீசி, 5 மெய்டன் ஓவர்கள் உட்பட 55 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போட்டி முழுவதும், மொத்தம் 38.1 ஓவர்கள் வீசிய அவர், 15 மெய்டன் ஓவர்களை வீசி 101 ரன்களுக்கு 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த குறிப்பிடத்தக்க சாதனை, போட்டியின் ஒரு ஆட்டத்தில் சிறந்த பந்துவீச்சாக குறிக்கப்பட்டது.

மேலும், போட்டித்தொடரின் பரிசளிப்பு விழா 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திரு.சமந்த தொடம்வல தலைமையில் நடைபெற்றது.