13வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித் தொடரில் கடற்படை இரண்டாம் இடத்தை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித் தொடர் 2024 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன், அங்கு இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படையின் ஆண்கள் கயிறு இழுத்தல் அணி பெற்றது.

அதன்படி, 13வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித் தொடரில் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) ஆண்கள் அணிகளும், மூன்று (03) பெண்கள் அணிகளும் பங்குபற்றியதுடன், கடற்படை ஆண்கள் அணியும் இராணுவ ஆண்கள் அணியும் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டது. அங்கு, கடும் போட்டிக்கு மத்தியில் கடற்படை அணி இரண்டாம் இடத்தை வென்றது.

இந்த சந்தர்ப்பத்திற்காக வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார, எயார் வைஸ் மார்ஷல் கே.சி.கீதப்பிரிய, பிரிகேடியர் எல்.ஜே.எம்.சி.பி. ஜயசுந்தர உட்பட முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட, இளநிலை அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.