சீனாவில் நடைபெற்ற 04வது ஆசிய பெரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கடற்படை வீரரான எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சுபசிங்க கடற்படைத் தளபதியினால் பாராட்டப்பட்டார்

சீனா ஹெங்சூவில் (HANGZHOU) நடைபெற்ற, 04 ஆவது ஆசிய பெரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 2023 ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை கடற்படை வீரரான எஸ்.எம்.ஏ.எஸ்.எம் சுபசிங்க, இன்று (2024 ஆகஸ்ட் 12) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்த போது, 04 ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர் ஆண்களுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவரது திறமையை பாராட்டி கடற்படைத் தளபதி நிதிப் பரிசையும் வழங்கிவைத்தார்.

அதன்படி, கடற்படையின் உறுப்பினராக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, 04 ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தாய்நாட்டிற்காக பதக்கம் வென்றதன் மூலம், கடற்படைக்கும் இலங்கைக்கும் கிடைத்த சாதனைகள் மற்றும் பெரும் மரியாதையை கருத்திற்கொண்டு, அவரது சேவையைப் பாராட்டிய கடற்படைத் தளபதி, அவருக்கு நிதிப் பரிசை வழங்கினார்.

மேலும், பணிப்பாளர் நாயகம் சேவைகள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் பிரியால் விதானகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.