‘MAHAMERUWA RALLY CROSS – 2024’ ஓட்டப் போட்டித் தொடரில், மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளை கடற்படையினர் பெற்றுள்ளனர்

இலங்கை மோட்டார் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘MAHAMERUWA RALLY CROSS – 2024’ ஓட்டப் போட்டித் தொடர் 2024 ஜூலை 28 ஆம் திகதி கிரிஉல்ல, மஹமெருவ ஓட்டப் பாதையில் நடைபெற்றதுடன், அங்கு கடற்படை அதிதீவிர மோட்டார் சைக்கிள் அணியினர் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளைப் பெற்றனர்.

இலங்கை மோட்டார் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டித் தொடரில் தீவின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மோட்டார் சைக்கிள் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் பங்குபற்றியதுடன், இந்தப் போட்டித்தொடர் பதினான்கு (14) மோட்டார் சைக்கிள் போட்டி பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.

இதன்படி, Racing 125CC போட்டியில் மூன்றாம் இடத்தை கடற்படை வீரர் ஈ.ஏ.பி.என்.எதிரிசிங்கவும், Standard 250CC போட்டியில் இரண்டாம் இடத்தையும் ஈ.ஏ.பி.என்.எதிரிசிங்கவும், அதன் மூன்றாவது இடத்தை கடற்படை வீரர் டி.எம்.எஸ்.எஸ்.குமாரவினாலும் பெற்றுக் கொண்டதுடன், Supermoto event – 01 மற்றும் Supermoto event – 02 போட்டிகளில் முறையே மூன்றாவது மற்றும் இரண்டாம் இடங்களை கடற்படை வீரர் டப்.டீ.டப்.பீ கருணாரத்ன பெற்றார்.