நடவடிக்கை செய்தி
நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 1285 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 604 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு, குட்டிதூவ மற்றும் குடாபாடுவ கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற ஆயிரத்து இருநூற்று எண்பத்தைந்து (1285) கிலோகிராம் பீடி இலைகள், அறுநூற்று நான்கு (604) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு கொள்கலன் (01) ஆகியவற்றை கடற்படையினரால் 2025 ஜூலை 29 ஆம் திகதி அன்று கைப்பற்றப்பட்டன.
30 Jul 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் பத்தலங்குண்டுவ மற்றும் மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 28 பத்தலங்குண்டுவ கடல் பகுதியிலும் மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பதினான்கு (14) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் இலங்கை
29 Jul 2025
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூலை 09 முதல் 22 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பதினாறு (16) டிங்கி படகுகளையும் அறுபத்தைந்து (65) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
26 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் எட்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 20 முதல் 22 வரை கற்பிட்டி வெல்லமுண்டலம், இப்பந்தீவு கடல் பகுதி, சிலாவத்துறை சவரிபுரம் அரிப்பு மேற்கு கடற்கரை பகுதி மற்றும் உச்சிமுனை வெல்ல தீவு ஆகிய இடங்களில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்றொன்பது (2399) கிலோகிராம் பீடி இலைகள், முப்பத்தைந்து (35) கிலோகிராம் ஏலக்காய் மற்றும் ஒரு தொகை விவசாய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) டிங்கி படகுகளையும், எட்டு (08) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
24 Jul 2025
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 21 இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நான்கு (04) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
22 Jul 2025
இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
21 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கல்பிட்டியில் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் மீன்பிடி படகொன்றையும் (01) கைது செய்தனர்.
21 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 750 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் புத்தளம், சேரக்குளிய, கல்பிட்டி மற்றும் கங்கேவாடிய கடலோரப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று ஐம்பது (750) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
20 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜூலை 19 ஆம் திகதி நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்தெட்டு (2828) கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.
20 Jul 2025
மேற்கு கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகிலிருந்து 03 மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

வத்தளை, பள்ளியவத்தையிலிருந்து சுமார் 02 கடல் மைல் (04 கிலோமீட்டர்) தொலைவில் மேற்கு கடலில் ஏற்பட்ட சீரரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த மூன்று (03) மீனவர்கள், 2025 ஜூலை 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அதனை டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலும் பதப்படுத்துவதற்காக மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டனர்.
20 Jul 2025