நடவடிக்கை செய்தி
41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் வடக்கு கடலில் 02 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.
31 Oct 2025
அனர்த்தத்திற்கு உள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 04 மீனவர்கள் சிதுரல கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்
ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 354 கடல் மைல் (655 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலைச் சேர்ந்த நான்கு (04) மீனவர்களும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கடற்படையினரால் மீட்கப்பட்டு, இன்று (2025 அக்டோபர் 31) காலை இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
31 Oct 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 793 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன்திவு தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று மூன்று (793) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
31 Oct 2025
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 06 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை 2025 அக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
30 Oct 2025
அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
30 Oct 2025
கல்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 956 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 27 ஆம் திகதி காலை, கல்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு (956) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
28 Oct 2025
கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட MV IYO கப்பலின் பணியாளர் ஒருவரை சிகிச்சைக்காக தரையிறக்க கடற்படையின் உதவி
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒருவர், இலங்கை கடற்படையின் உதவியுடன் அவசரமாக கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக 2025 அக்டோபர் 26 ஆம் திகதி திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
27 Oct 2025
தெற்கு கடலில் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து, ஆபத்தில் சிக்கிய MV INTEGRITY STAR வணிகக் கப்பலின் பணியாளர்களை கடற்படை வெற்றிகரமாக மீட்டது
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று (2025 அக்டோபர் 26,) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
26 Oct 2025
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 28 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 அக்டோபர் 08 முதல் அக்டோபர் 19 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, இருபத்தெட்டு (28) சந்தேக நபர்களுடன், எட்டு டிங்கி படகுகளை கைப்பற்றினர்.
23 Oct 2025
கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
22 Oct 2025


