வென்னப்புவை லுனுவில கடலில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட சுமார் 554 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
வென்னப்புவை, லுனுவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 2026 ஜனவரி 03 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் ஐநூற்று ஐம்பத்து நான்கு (554) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு டிங்கி (01) படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
அதன்படி, வென்னப்புவை, லுனுவில கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒரு படகு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதி வழியாக நிலத்தை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது, சட்டவிரோதமாக பதினெட்டு (18) பொதிகளில் பொதிச்செய்து கொண்டு வரப்பட்ட சுமார் ஐநூற்று ஐம்பத்து நான்கு (554) கிலோகிராம் பீடி இலைகளும் (01) டிங்கி படகு மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 19 மற்றும் 29 வயதுடைய கல்பிட்டியின் ஆனவாசலை மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க மற்றும் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.




