கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் கிழக்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி
2025 டிசம்பர் 10 ஆம் திகதி இரவு, திருகோணமலையிலிருந்து 16 கடல் மைல் (சுமார் 29 கி.மீ) தொலைவில் கிழக்குக் கடலில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த ஒரு மீனவரை அவசரமாக தரையிறக்கி, சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.
திருகோணமலை, கோட்பே மீன்வளத் துறைமுகத்திலிருந்து 2025 ஜனவரி 02 ஆம் திகதி ஆறு (06) மீனவர்களுடன் புறப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலான ‘அகீத் 2’ (IMUL-A-0957 TLE), திருகோணமலைக்கு கிழக்கே 16 கடல் மைல் (சுமார் 29 கி.மீ) தொலைவில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதில் இருந்த ஒரு மீனவர் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் விழுந்தார். மீனவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டுவர கடற்படைக்கு உதவி வழங்குமாறு மீன்வள மற்றும் நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டுவர கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படைக் கப்பலை கடல் பகுதிக்கு அனுப்பியது.
அதன்படி, 2025 ஜனவரி 02 ஆம் திகதி இரவு, கடற்படைக் கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டுவந்த பின்னர், கடற்படையினர் மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளிக்க நடவடிக்கை எடுத்து, அவரை உடநடியாக திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு வந்த்தன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை ஆயத்தமாக உள்ளது.


