நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840 கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியொன்று கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, 2025 நவம்பர் 11, அன்று கல்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட எண்ணூற்று நாற்பது (840) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரக் கட்டிகளுடன் கெப் வண்டியொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

13 Nov 2025

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐம்பது (50) நபர்களுடன் பதினைந்து (13) டிங்கி படகுகள், ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Nov 2025