நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1180 கிலோகிராம் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு கற்பிட்டியின் சேரக்குளிய களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நூற்று எண்பது (1180) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இருபதாயிரம் (20,000) வெளிநாட்டு சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், இரண்டு (02)

13 Aug 2025

பேசாலையில் ரூ.24 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

தலைமன்னார், குடியிருப்பு மற்றும் பேசாலைக்கு இடைப்பட்ட கரையோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படையினரால் நூற்றுப் பத்து (110) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த தெரு மதிப்பு இருபத்தி நான்கு (24) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.

13 Aug 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் கற்பிட்டியில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு கற்பிட்டி திகாலி பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, முந்நூற்று எழுபத்தொன்பது (379) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஆறாயிரம் (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று எண்பத்தோராயிரத்து இருநூறு (281200) மருந்து மாத்திரைகள் மற்றும் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்றொன்று (1291) மருந்து ஊசிகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு (01) சந்தேக நபருடன் பறிமுதல் செய்யப்பட்டன.

13 Aug 2025