நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 16 சந்தேக நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) சந்தேக நபர்களையும், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
12 Aug 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1590 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் முகத்துவாரம் களப்பு மற்றும் கடல் பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட (1590) ஆயிரத்து ஐநூற்று தொண்ணூறு கிலோகிராமை விட அதிகமாக பீடி இலைகளுடன் ஒரு (01) சந்தேக நபர் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
12 Aug 2025


