நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 23 நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்களையும், பொலிஸாருடன் இணைந்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட இருநூற்று பத்து (210) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஐந்து (05) டிங்கிகள் மற்றும் ஒரு (01) சந்தேக நபரையும் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

01 Aug 2025

கடற்படையினரால் மேற்கொண்ட நடவடிக்கையினால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி நீர்க்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐநூற்று எண்பத்து மூன்று (583) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

01 Aug 2025