நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வர முயன்ற ஏலக்காய் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 03 சந்தேகநபர்கள் மன்னாரில் கடற்படையினரால் கைது

மன்னார் தாவுல்பாடு கடற்கரையில் 2025 மார்ச் 23ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 402 கிலோவிற்கும் அதிகமான ஏலக்காய், 3781 ஷாம்பு பாக்கெட்டுக்கள் மற்றும் 51 அழகுசாதனப் பாக்கெட்டுக்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2025