இலங்கை கடற்படையினர் இன்று (2025 பெப்ரவரி 17) அதிகாலை யாழ்ப்பாணம் கல்முனை முனையின் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த 140 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.