நடவடிக்கை செய்தி

வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை ஜின்னபுரம் கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கர்நாடகேணி கடற்பகுதிக்கு அப்பால் கடலில் 2024 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களை கைப்பற்றினர்.

19 Sep 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி உச்சமுனை கடற்பகுதிக்கு அப்பால் 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

19 Sep 2024