நடவடிக்கை செய்தி
திருகோணமலை மொல்லிப்பொத்தானையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து திருகோணமலை மொல்லிப்பொத்தானை பகுதியில் 2023 ஜூன் மாதம் 01 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கு (01) அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
02 Jun 2023
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதியில் இன்று (2023 ஜூன் 01) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தைந்து நபர்கள், ஆயிரத்து அறுபத்தெட்டு (1068) கடல் அட்டைகள், ஏழு (07) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.
02 Jun 2023


