நடவடிக்கை செய்தி
மன்னார் கடல் பகுதியில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் 2023 மே மாதம் 8 ஆம் திகதி மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர்; வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன.
09 May 2023
யாழ்ப்பாணத்தில் 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் இன்று (மே 08, 2023) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
09 May 2023


