இலங்கை கடற்படை 2021 மார்ச் 04 ஆம் திகதி மற்றும் இன்று (2021 மார்ச் 05) அதிகாலை சிலாவத்துர, மனல்குளம்,நொரொச்சோலை மற்றும் பூலாச்செனை பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.