நடவடிக்கை செய்தி

ரூபா 06 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் ஊருமலை கடலோரப் பகுதியில் 2021 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 01 கிலோ மற்றும் 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2021