நடவடிக்கை செய்தி
ஹம்பாந்தோட்டை நகராட்சி மன்ற குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி
2026 ஜனவரி 23 அன்று, ஹம்பாந்தோட்டை நகராட்சி மன்றத்தின் குப்பை அகற்றும் இடத்தில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க தெற்கு கடற்படையின் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் கடற்படைக் குழுவினரால் உதவி வழங்கப்பட்டது.
26 Jan 2026
தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி
இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் ஏற்பட்ட விபத்து காரணமாக உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அவசரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (2026 ஜனவரி 21,) காலை கடற்படையினரால் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
21 Jan 2026
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கோவிலன் பகுதிக்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2026 ஜனவரி 20 அன்று இரவு, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் ஏழு (07) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
21 Jan 2026
யாழ்ப்பாணம் வெண்புரிநகர் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்ததற்காக 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
யாழ்ப்பாணத்தின் வெண்புரிநகர் கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக கடல் அட்டைகளை மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு (04) நபர்களையும், முன்னூற்று ஐம்பத்தொரு (351) கடல் அட்டைகள்’ மற்றும் ஒரு (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
21 Jan 2026
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 23 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் 2026 ஜனவரி 14 முதல் 19 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி மூன்று (23) நபர்கள், ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) இழுவைப் படகு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
21 Jan 2026
கிளிநொச்சி வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் அட்டைகளுடன் 13 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் 2026 ஜனவரி 19 அதிகாலை கிளிநொச்சி வடக்கு, வலைப்பாடு கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு நேரத்தில் சட்டவிரோதமாக சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதின்மூன்று (13) நபர்களையும், ஆயிரத்து நூற்று எட்டு (1108) கடல் அட்டைகளுடன், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
20 Jan 2026
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், தெற்கு கடலில் மிகவும் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவியது
இலங்கையின் தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவர், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கடற்படைக் கப்பலால் அவசரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (2026 ஜனவரி 19,) காலை கடற்படையினரால் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
19 Jan 2026
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் கல்பிட்டியில் பறிமுதல் செய்யப்பட்டன
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜனவரி 14 ஆம் திகதி கல்பிட்டி குடாவ பகுதியில் ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினேழு (617) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) கெப் வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
17 Jan 2026
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற இருநூற்று முப்பத்தேழு (237) பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகையும், மூன்று (03) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
15 Jan 2026
திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் 2026 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
15 Jan 2026


