நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக சந்தேகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை கல்பிட்டியவில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டிய, பங்களவத்தை மற்றும் சேதவாதீ கடலோரப் பகுதிகளை உள்ளடக்கி 2026 ஏப்ரல் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில், இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், சந்தேகத்திற்கிடமான பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2026

உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிக் படக்கொன்றுடன் 10 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Apr 2026

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

2026 மார்ச் 31 அன்று கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற தொண்ணூற்றெட்டு (98) கிலோகிராம் ஏலக்காயை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Apr 2026

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையானது, 2026 மார்ச் 31 அன்று கல்பிட்டியவின் குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

01 Apr 2026

புத்தளத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 468 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 மார்ச் 26 ஆம் திகதி இரவு புத்தளம், தலவில, எரம்புகொடெல்ல கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

30 Mar 2026

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாரின் வங்காலை கடல் பகுதியில் 2026 மார்ச் 27 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், முந்நூற்று நாற்பத்தொன்பது (349) கடல் அட்டைகளுடன், சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

30 Mar 2026

மன்னார் பாலகமுனை கடலில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாரின் பாலகமுனை கடல் பகுதியில் 2026 மார்ச் 20 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (03) நபர்களையும், முந்நூற்று நான்கு (304) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

23 Mar 2026

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் சில ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் பதினாறு (116) கிலோகிராம் ஏலக்காய் ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

19 Mar 2026

சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

19 Mar 2026

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் 2026 மார்ச் 12 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Mar 2026