நடவடிக்கை செய்தி

பழுதடைந்த பேராறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகளை சரிசெய்வதற்கு கடற்படையின் உதவி

பேராறு நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த வான்கதவுகளை சரிசெய்வதற்காக இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் நபர்கள் 2023 டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அர்ப்பணிப்பு பணியை மேற்கொண்டனர். வவுனியா மாவட்டத்தின் பேராறு குளம் பகுதியில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினால் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18 Dec 2023

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 17 ஆம் திகதி காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 Dec 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கடற்படையினரால் மேற்குக் கடலில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 17) நீர்கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயன்ற சுமார் 1143 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 02 டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Dec 2023

சட்டவிரோதமான முறையில் உலர் கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 04 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 டிசம்பர் 16 ஆம் திகதி அதிகாலை மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது எண்ணூற்று எட்டு (808) கிலோகிராம் உலர் கடல் அட்டைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

17 Dec 2023

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, மன்னார் வங்காலே, யாழ்ப்பாணம் கல்முனெதுடுவ பிரதேச கடற்பகுதிகளில் மற்றும் நீர்கொழும்பு கரையோர கடற்பகுதியில் 2023 டிசம்பர் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினேழு (17) நபர்களுடன் ஆறு (06) டிங்கி படகுகள், சுமார் எழுநூற்று நாற்பதி மூன்று (743) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி கருவிகள் கைப்பற்றப்பட்டன.

15 Dec 2023

வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 டிசம்பர் 03 முதல் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பராக்கிரமபுர பகுதிக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் தற்போது அப் பகுதியில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14 Dec 2023

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13) காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் ஆறு (06) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Dec 2023

சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13,) அதிகாலை சிலாவத்துறை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏழு (07) பேருடன் இரண்டு டிங்கி படகுகள் (02), எண்ணூற்று எழுபத்து நான்கு ( 874) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

13 Dec 2023

சட்டவிரோத போதை மாத்திரைகள் பொதி யொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் 2023 டிசம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆறாயிரம் (6,000) Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

13 Dec 2023

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 09 ஆம் திகதி இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 Dec 2023