நடவடிக்கை செய்தி
வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றும் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் பயிற்சி பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது (தொழில்நுட்ப) மற்றும் 36வது ஆட்சேர்ப்பின் சேர்ந்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு 2022 ஜூலை 22 ஆம் திகதி திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
23 Jul 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் 2022 ஜூலை 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
21 Jul 2022
சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசூரினா கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் 2022 ஜூலை 19 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டதுடன் 575 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா குறித்த டிங்கி படகில் இருந்து (ஈரமான எடை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதனுடன் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
20 Jul 2022
பல கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக 2022 ஜூலை 18 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கச்சத்தீவு அருகே கடலில் மிதந்த சுமார் 30 கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
19 Jul 2022
வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் உள்ள இரும்பு சேகரிப்பு நிலையமொன்றில் 2022 ஜூலை 16 ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபடுகின்றனர்.
17 Jul 2022
சுமார் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) யாழ்ப்பாணம், மண்டைதீவு, சம்பக்குளம் கடற்கரை, கல்முனை துடுவ கடற்கரை மற்றும் ஊர்காவற்துறை அல்லப்பிட்டி கடற்கரை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது சுமார் 65 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
15 Jul 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயன்று உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட 55 பேர் ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 390 கடல் மைல் (சுமார் 722 கி.மீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு பகுதி ஆழ்கடலில் வீசிய புயலில் சிக்கி பாதிக்கப்பட்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு ஆபத்தில் இருந்த சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 55 பேர் இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 10ஆம் திகதி மீட்கப்பட்டதுடன், அவர்களை இன்று (2022 ஜூலை 12) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.
12 Jul 2022
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 ஜூலை 11 ஆம் திகதி மாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
12 Jul 2022
சுமார் 67 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 11) மன்னார், தேவம்பிட்டி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 225 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளனர்.
12 Jul 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 78 பேர் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கடற்பகுதியிலும் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரை பகுதியிலும் 2022 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இரவு மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 78 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
11 Jul 2022