நடவடிக்கை செய்தி

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்று அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து கடந்த 2022 ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடல் எல்லையில் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வந்த அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கு சொந்தமான ஓஷன் சீல்ட் (Australian Border Force Cutter Ship - Ocean Shield) கப்பல் இன்று (2022ஆகஸ்ட் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

05 Aug 2022

காலி பிரதேசத்தில் வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில், பாலங்களை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிங் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக காலி பிரதேசத்தில் அகலிய மற்றும் தொடம்கொட பாலங்களை அண்மித்த பகுதியில் சிக்கிய மரக்குற்றிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்றை 2022 ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்டனர்.

04 Aug 2022

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் (ஈரமான எடை) கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர்.

04 Aug 2022

சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதி மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 03) காலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 49 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

04 Aug 2022

திருகோணமலை கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

திருகோணமலை வெளி துறைமுகப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான சிறிய மீன்பிடிப் படகொன்றில் இருந்த மூன்று (03) மீனவர்களை 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

04 Aug 2022

சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 47 கிலோ மற்றும் 240 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

03 Aug 2022

இலங்கை கடற்படையின் 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2022 ஆகஸ்ட் 02) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

02 Aug 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் 2022 ஜூலை 31 ஆம் திகதி இரவு வென்னப்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

01 Aug 2022

நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரால் மீட்பு

படகில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் தலைமன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 06 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு, 2022 ஜூலை 31 அன்று சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) மற்றொரு இந்திய மீன்பிடி படகொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.

31 Jul 2022

சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 23 ஆம் திகதி இரவு மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 Jul 2022