நடவடிக்கை செய்தி
அம்பாறை, களுகல்ஓய குளத்தின் மதகு கதவு திருத்தம் செய்வதற்கு கடற்படையின் பங்களிப்பு

அம்பாறை, களுகல்ஓய குளத்தின் மதகு கதவு செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால் அதனை கைமுறையாகச் செயற்படுத்துவதற்கு 2022 ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
25 Oct 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 45 பேர் காலி ஹபராதுவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 45 பேர் காலி ஹபராதுவ கரையோரப் பகுதியில் இன்று (2022 ஒக்டோபர் 23) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்த பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2022
வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகள் 400 குச்சிகள் யாழ்ப்பாணம் ககரதீவுப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், ககரதீவில் இன்று (2022 ஒக்டோபர் 20) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தீவில் நுணுக்கமாக புதைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிமருந்து 400 குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
21 Oct 2022
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகு 03 இந்திய மீனவர்களுடன் கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் கைது செய்யப்பட்டன.
20 Oct 2022
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கல்பிட்டி பாரமுனை கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடலில் மிதந்து கொண்டிருந்த 427 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.
08 Oct 2022
கல்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற போது கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய இழுவை படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேரை இலங்கை கடற்படையினர் இன்று (2022 அக்டோபர் 01) மீட்டுள்ளனர்.
02 Oct 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 07 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 07 பேர் மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
29 Sep 2022
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் மிதந்த இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்தடைந்த இந்திய மீன்பிடிப் படகொன்று பருத்தித்துறையில் இருந்து 26 கடல் மைல் (சுமார் 48 கிமீ) தொலைவில் வடக்கு கடற்பரப்பில் உள்ளதை இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டதுடன் குறித்த படகுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கி சர்வதேச கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டு இந்திய கடலோர காவல்படையின் எனீ பெசன்ட் (ICGS Annie Besant) கப்பலிடம் இன்று காலை (2022 செப்டம்பர் 28) இலங்கை கடற்படையால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
28 Sep 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேர் மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
28 Sep 2022
தொட்டலங்க பகுதியில் ஏற்பட்ட அவசர தீயை அணைக்க கடற்படையின் உதவி

தொட்டலங்க கஜிமாவத்த பகுதியில் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கும் தீ பரவாமல் தடுப்பதற்கும் இரண்டு (02) கடற்படை தீயணைப்பு குழுகள் உதவினர்.
28 Sep 2022