நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கிண்ணியா, சின்னவேலி, சள்ளிமுனை, நந்திக்கடல், வங்காலை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) பேர், இரண்டு (02) மீன்பிடி கப்பல்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் அறுபத்தைந்து (65), நான்கு (04) டெட்டனேட்டர்கள், இரண்டு (02) ஜெலக்னைட் குச்சிகள் மற்றும் மூன்று (03) அங்குலங்கள் நீளமான சேவா நூல்கள் நான்கு (04) என்பன கைப்பற்றப்பட்டன.

28 Feb 2025

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி இரவிலும், 23ஆம் திகதி காலையிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

23 Feb 2025

கடற்படையினரால் இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் சிலாவத்துறை, வில்பத்து, திருகோணமலை கொட்பே மற்றும் மோதர கிபுலா கால்வாய், கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, இருபது (20) கிராம் கேரள கஞ்சா, ஆயிரத்து ஐம்பது (1050) மில்லிகிராம் மாவா போதைப்பொருள் மற்றும் இருபத்தி ஆறு (26) கிராம் ஐஸ் போதைப்பொருள் முந்நூற்று நாற்பத்தாறு (376) மில்லிகிராம்களுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் கைது செய்தனர்.

21 Feb 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகும் மீன்பிடி பத்திரம் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் ஆகியவை கண்டறியப்பட்டதுடன், கடலட்டைகள் மற்றும் சங்குகளை பிடித்த பதினேழு (17) பேர், பன்னிரண்டு (12) மீன்பிடி படகுகள்,மோட்டார் சைக்கிலொன்று (01) மற்றும் நூற்று ஐம்பத்தாறு (156) சட்டவிரோத மீன்பிடி வலைகள், நூற்று எண்பத்து நான்கு (184) கடலட்டைகள் மற்றும் இருபத்தி இரண்டு (22) சங்குகளை கைது செய்யப்பட்டனர்.

21 Feb 2025

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் மற்றும் நெடுந்தீவுக்கு 2025 அப்பால் பெப்ரவரி 19 இரவு, மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பத்து (10) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

20 Feb 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் குள பகுதியில் 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து மற்றும் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேர் கொண்ட நான்கு (04) மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று ஐம்பது (250) சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டன.

13 Feb 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1158 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைது

கடற்படையினர் 2025 பெப்ரவரி 11 அன்று, புத்தளம் தளுவ பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரயானம் செய்து கொண்டிருந்த நூற்று ஐம்பத்தெட்டு (1158) கிலோகிராம் மற்றும் அறுபது (60) கிராம் உலர் இஞ்சி மற்றும் நாற்பத்தைந்து (45) கிலோகிராம் உலர் கருவாடு, 01 கெப் வண்டியுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Feb 2025

யாழ்ப்பான நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இடையே செயலற்ற நிலையில் இருந்த ஒரு படகை பாதுகாப்பாக தரையிறக்க கடற்படையின் உதவி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு விஜயம் செய்யச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாத் தம்பதியரை நெடுந்தீவிற்கும் குறிகட்டுவானுக்கு இடைப்பட்ட கடலில் எரிபொருள் பற்றாக்குறையால் செயலற்று மிதந்து கொண்டிருந்த போது தேவையான உதவிகளை செய்த பின் கடற்படையினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

10 Feb 2025

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி சிகரெட்டுகளுடன் 02 சந்தேகநபர்கள் மெதவச்சியில் கைது

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி, இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று (03) கிராம் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் மற்றும் நானூறு (400) போலியான சிகரட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

09 Feb 2025

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Feb 2025