நடவடிக்கை செய்தி

இந்நாட்டில் பல நாள் மீன்பிடி படகில் பெருந்தொகை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் படி, 2025 ஏப்ரல் 11ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டன. பல நாள் மீன்பிடி கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 77 கிலோ 484 கிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருளானது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

12 Apr 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமீன்மாது, வங்காலை, மண்டைதீவு, இறக்கக்கண்டி, உள்ளங்காளி கலப்பு, வாழைச்சேனை, ஊறணிக் குளம், ஒலுத்துடை, கடைக்காடு, சுண்டிக்குளம், மட்டக்களப்பு நாவக்காடு கலப்பு, வவ்னதீவு கலப்பு மற்றும் வலைப்பாடு கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் 07 ஏப்ரல் வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரவு நேரங்களில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 Apr 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 2554 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கலால் துறை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியிலும் மாவனெல்ல பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு மற்றும் சேமித்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து நான்கு (2554) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், இரண்டு (02) லொறிகள் மற்றும் ஒரு (01) வேன் கைப்பற்றப்பட்டது.

11 Apr 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1142 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, நுரைச்சோலை தலுவ பகுதியில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து நூற்று நாற்பத்திரண்டு (1142) கிலோகிராம் மற்றும் எழுநூறு (700) கிராம் உலர்ந்த மஞ்சள் பொதியை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

11 Apr 2025

சுமார் 82 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, பிடிபன பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 09 அன்று நீர்கொழும்பின், பிடிபன பகுதியிலும் கொழும்பின் கெசல்வத்த பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று ஐந்து (205) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு (958) கிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு (01) லொரி மற்றும் ஒரு (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2025

121 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதி மற்றும் மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா சுமார் முன்னூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் (01) சந்தேக நபர் ஒருவரை 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

08 Apr 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1287 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், கல்பிட்டி மாம்புரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கடத்துவதற்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று என்பத்தி ஏழு (1287) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் லொறி ஒன்றும் 2025 ஏப்ரல் 04 கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

05 Apr 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 675 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட அறுநூற்று எழுபத்தைந்து (675) கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி (01) மற்றும் இரண்டு சந்தேக நபர்களை (02) கைது செய்தனர்.

02 Apr 2025

புத்தளத்தில் 3000 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி புத்தளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

01 Apr 2025

தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலில் நோய்வாய்ப்பட்டிருந்த சீன நாட்டவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டு வருவதற்கு கடற்படையினர் உதவினர்

இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் விரைவாக கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு இன்று (2025 மார்ச் 30) கொண்டு வருவதற்கு கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

30 Mar 2025