நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, திருகோணமலை, நிலாவெளி கிழக்கு கடற்பரப்பில் 2023 மார்ச் 12 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி கப்பலொன்றுடன் கப்பலில் இருந்த மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2023

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பலநாள் மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இன்று (2023 மார்ச் 12) காலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினாறு (16) இந்திய மீனவர்கள் வெத்தலகேணி பகுதிக்கு வடகிழக்கு இலங்கை கடற்பரப்பில் மற்றும் அனலத்தீவிற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 Mar 2023

41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரைப் பகுதியில் 2023 மார்ச் மாதம் 10ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 126 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

11 Mar 2023

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பகுதியில் 04 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டி வீதித் தடுப்பில் 2023 மார்ச் மாதம் 01ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 04 கிலோ கிராம் கொண்ட இரண்டு (02) கேரள கஞ்சா பார்சல்களை பஸ் வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

02 Mar 2023

கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன.

கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலக் கூட்டத்தை பாதுகாப்பாக விடுவிக்க இன்று (2023 பிப்ரவரி 11) இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர்.

12 Feb 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 பிப்ரவரி 09) அதிகாலை புத்தளம், சேரக்குளிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 239 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் (ஈரமான எடை) மற்றும் 921 கிலோகிராம் சுறா துடுப்புகள் (ஈரமான எடை) கொண்ட இரண்டு லொறிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Feb 2023

10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் 2023 பெப்ரவரி 06 ஆம் திகதி இரவு நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

07 Feb 2023

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேருடன் 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், 671 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

05 Feb 2023

சுமார் 04 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2023 ஜனவரி 28 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

29 Jan 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு கடல் மற்றும் களப்பு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது

நீர்கொழும்பு கடற்பரப்பில் மற்றும் களப்பு பகுதியில் 2023 ஜனவரி 26ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

27 Jan 2023