நடவடிக்கை செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இன்று (2023 மார்ச் 23) காலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைதீவு மற்றும் கோவிலன் பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Mar 2023

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

கடற்படை மற்றும் முல்லைத்தீவு கடற்தொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 22 ஆம் திகதி புல்முடே, துடுவ பிரதேசத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 Mar 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் ஒருதொகை வென்னப்புவ கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 22, 2023) அதிகாலை வென்னப்புவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துகொண்டிருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரமுயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 379 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்துள்ளனர்.

22 Mar 2023

மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்பகுதியில் இன்று (21 மார்ச் 2023) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

21 Mar 2023

58 வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

2023 மார்ச் 18 ஆம் திகதி திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 58 வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்கள் மற்றும் 100 டெட்டனேட்டர்களுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

19 Mar 2023

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையில் இருந்து 28 நீர் ஜெல் குச்சிகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 28 குச்சிகள் கைப்பற்றப்பட்டன.

18 Mar 2023

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் ஜா-எல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி மாலை ஜாஎல பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலன் போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய 2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

18 Mar 2023

முல்லைத்தீவு கடலில் மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அலம்பில் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவருடன் (02) இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

18 Mar 2023

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 08 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை மன்னார், சிலாவத்துறை மற்றும் வங்காலே கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது நீர்மூழ்கிக் கருவிகள், 814 கடல் அட்டைகள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளுடன் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

14 Mar 2023

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1128 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரவு புத்தளம், முக்குதொடுவாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 1128 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் லொறி வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

14 Mar 2023