நடவடிக்கை செய்தி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டன

இலங்கைக்கு பாதித்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் தெற்கு மாகாணத்தின் அகுரெஸ்ஸ, அத்துரலிய, தவலம மற்றும் கம்புறுப்பிட்டிய பிரதேசங்களுக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்துள்ளதுடன் குறித்த நிவாரண குழுக்கள் தற்போது பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வருகின்றது.
01 Oct 2023
காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது

காலி வக்வெல்ல பிரதேசத்தில் கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2023 செப்டெம்பர் 29 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
30 Sep 2023
நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டெம்பர் 28,) தென் மாகாணத்தில் சில பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளனர்.
28 Sep 2023
சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் கரைநகர் தீவில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கரைநகர் தீவின் பூமட்டை கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா ஏற்றப்பட்ட டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
28 Sep 2023
15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் தெஹிவளையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து 2023 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) அடங்கிய பார்சலுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
28 Sep 2023
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நகர்கோவில் கடற்பரப்பில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த மூன்று (03) நபர்கள், சுழியோடி உபகரணங்கள், சுமார் இருநூற்று ஐம்பது (250) கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது.
28 Sep 2023
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1236 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

புத்தளம் தளுவ கடற்கரைக்கு அருகில் 2023 செப்டெம்பர் 26 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முரையில் கொண்டு வரப்பட்டு போக்குவரத்திற்காக தயார் செய்யப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் (1236) கெப் வண்டியொன்று (01) மற்றும் லொறி வண்டியொன்று (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
27 Sep 2023
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி வன்னிமுந்தலம குளத்தில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி கல்பிட்டி, வன்னிமுந்தலம குளம் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த குளம் பகுதியாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட அறுநூற்று முப்பத்தொன்பது (639) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகு ஒன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.
14 Sep 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், ககரதீவு மற்றும் கோவிலன் கலங்கரை விளக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினேழு (17) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Sep 2023
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டம்பர் 13,) காலை திருகோணமலை சல்லிப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பேருடன் (06) டிங்கி படகு ஒன்றை கைதுசெய்துள்ளனர்.
13 Sep 2023