சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1590 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் முகத்துவாரம் களப்பு மற்றும் கடல் பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட (1590) ஆயிரத்து ஐநூற்று தொண்ணூறு கிலோகிராமை விட அதிகமாக பீடி இலைகளுடன் ஒரு (01) சந்தேக நபர் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, மேற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளால் நீர்கொழும்பு களப்பு, புத்தளம் களப்பு மற்றும் கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம், ஒரு சந்தேக நபர் (01) மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் ஆயிரத்து ஐநூற்று தொண்ணூறு (1590) கிலோகிரமை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் நீர்கொழும்பு களப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அதே நேரத்தில் புத்தளம் களப்பிலும் முகத்துவாரம் கடற்பரப்பிலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் சிறப்பு மதுவரி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.