சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கல்பிட்டியில் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் மீன்பிடி படகொன்றையும் (01) கைது செய்தனர்.

கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், மேலும் கடல் வழியாக பொருட்களை கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்ச்சியான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், கடற்படையினர் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஏழு (07) பைகளில் பொதிச் செய்யப்பட்ட பன்னிரண்டு (12) கிலோகிராம் ஏலக்காய், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் வல்லம் கப்பலை ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், பூச்சிக்கொல்லிகள், ஏலக்காய் மற்றும் வல்லம் படகு ஆகியவற்றை சந்தேக நபர்களுடன் சேர்த்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.