மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 65 புறாக்களுடன் 2 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் நடுக்குடா கடற்கரைப் பகுதியில் 2025 ஜூன் 30 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அறுபத்தைந்து (65) புறாக்களை ஏற்றி வந்த ஒரு டிங்கி (01) படகையும், இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, 2025 ஜூன் 30 அன்று, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்திற்கு உட்பட்ட நடுகுடா கடற்படை பிரிவில் நிறுவப்பட்ட ரேடார் அமைப்பிலிருந்து ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று அவதானிக்கப்பட்ட பின்னர், அக் கடலோரப் பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை ஆய்வு செய்தபோது, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று (03) கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறுபத்தைந்து (65) புறாக்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 43 வயதுடைய பேசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் புறாக்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.