கடற்படை நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் ஒருவருடன் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2025 ஜூன் 16 அன்று ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த சுமார் 3200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரை கைது செய்தனர்.
அதன்படி, கண்டியின் உடபெராதெனிய பகுதியில் கடுகண்ணாவ பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படை கப்பல் ஷில்ப நிறுவனம் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோத விற்பனைக்காக தயாராக இருந்த சுமார் 3200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபரை (01) கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.