சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரபட்ட 1300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளும் 29000 ஐ விடவும் அதிகமான பீடி தொகையினை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 ஜூன் 22 ஆம் திகதி மன்னார், நடுக்குடா மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து (1365) கிலோகிராம் பீடி இலைகளும், சுமார் இருபத்தொன்பதாயிரத்து நூறு (29100) பீடிகளும் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, 2025 ஜூன் 22 அன்று, நடுக்குடா மற்றும் ஓலைத்தொடுவாய் அருகே, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, அந்தப் பகுதிகளில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 சந்தேகத்திற்கிடமான பொதிகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1365 கிலோ பீடி இலைகள் மற்றும் சுமார் 29100 பீடிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் பீடித் தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.