மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் பொருட்களுடன் 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் 2025 ஜூன் 06 ஆம் திகதி காலை நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து முந்நூற்று பதினான்கு (1314) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சில பொருட்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நடுக்குடா கடல் பகுதியில் கரையை நோக்கி பயணித்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் அவதானிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அப்போது, கடற்படையினர் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் நான்கு (04) சந்தேக நபர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து முந்நூற்று பதினான்கு (1314) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சில பொருட்களை கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள், டிங்கி படகுகள், பீடி இலைகள், மற்றும் ஏனைய பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரித் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டன.