சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, மீன்வள ஆய்வாளருடன் இணைந்து, கட்டைக்காடு, கொக்குத்துடுவாய், திரியாய, நயாறு, மான்கர்னி, வாலைத்தோட்டம், குடுயிருப்பு, புல்லையாரடி, வவுணதீவு மற்றும் கந்தக்குடா ஆகிய கடல் பகுதிகளில் 2025 மே 20 முதல் 25 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த (26) நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, இலங்கை கடற்படை கப்பல்களான காஷ்யப்ப, கோட்டாபய, ரன்வெலி, வலகம்பா, லங்காபட்டுன மற்றும் வெத்தலகேணி ஆகிய நிறுவனங்களின் கடற்படையினர் மீன்வள ஆய்வாளர் காரியாலயத்துடன் இணைந்து, இருபத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 26 நபர்கள், நூற்று எழுபத்தெட்டு (178) சட்டவிரோத வலைகள், பத்து (10) டிங்கிகள், மீன்பிடி உபகரணங்கள், சட்ட விரோத வெடிப்பொருட்கள் மற்றும் மின் விளக்கு உபகரணங்கள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி கப்பல்கள் மற்றும் டிங்கிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, குச்சவெளி, மட்டக்களப்பு மற்றும் ஈச்சிலம்பற்று ஆகிய கடற்றொழில் பரிசோதகர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.