சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வேளாண் இரசாயனங்கள், பீடி இலைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்று நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினரால் கைது

2025 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு டிங்கி படகிலிருந்து ஆயிரத்து நூற்று ஐம்பத்தாறு (1156) போத்தல்கள் வேளாண் இரசாயனங்கள், நான்காயிரத்து இருநூற்று இருபத்து நான்கு (4224) பக்கெட்டுகள் வேளாண் இரசாயனங்கள், அறுபத்தேழு (67) கிலோகிராம் எண்ணூறு (800) கிராம் பீடி இலைகள் மற்றும் எழுபத்தைந்து (75) கிலோகிராம் முன்னூறு (300) கிராம் ஏலக்காய் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.

கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி, சிறப்பு கப்பல் படைப்பிரிவுடன் இணைந்து, நீர்கொழும்பு கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகு, கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக நாட்டிற்குள் கொண்டு வர முடியாததால் கடத்தல்காரர்களால் அந்த கடல் பகுதியில் கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகு, வேளாண் இரசாயனங்கள் போத்தல்கள் மற்றும் பக்கெட்டுகள், பீடி இலைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு காவல்துறை குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.