சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு செல்ல தயாராக இருந்த 8 கிலோ 960 கிராம் தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் தலைமன்னாரின், ஊருமலை கடலோரப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக செல்ல கொண்டு தயார் நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் எட்டு (08) கிலோ தொள்ளாயிரத்து அறுபது (960) கிராம் தங்கத்துடன் தலைமன்னார் ஊருமலை பகுதியில் 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) தெப்பம் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

கடல் வழிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவிற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேக நபர்களும் தலைமன்னார், ஊருமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் வழியாக தங்கத்தை கொண்டு செல்ல தயாராக இருந்த சுமார் எட்டு (08) கிலோ தொள்ளாயிரத்து அறுபது (960) கிராம் தங்கம் மற்றும் தெப்பம் படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.