சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1142 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, நுரைச்சோலை தலுவ பகுதியில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து நூற்று நாற்பத்திரண்டு (1142) கிலோகிராம் மற்றும் எழுநூறு (700) கிராம் உலர்ந்த மஞ்சள் பொதியை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பற்காக, கடற்படையினர் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி காலை கல்பிட்டி, நுரைச்சோலையின் தலுவ பகுதியில், வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் விஜய மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வண்டி கவனிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சந்தேகத்திற்கிடமான படகொன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டதுடன் அங்கு சட்டவிரோதமான முறையில் கெப் வண்டியின் மூலமாக கொண்டு வந்து முப்பத்தொரு (31) பைகளாக பொதி செய்யப்பட்ட ஆயிரத்து நூற்று நாற்பத்திரண்டு (1142) கிலோ எழுநூறு (700) கிராம் உலர் மஞ்சளுடன், ஒரு கெப் வண்டி மற்றும் சந்தேக நபரொருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர், உலர்ந்த மஞ்சள் தொகை மற்றும் கெப் வண்டி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.