சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 675 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட அறுநூற்று எழுபத்தைந்து (675) கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி (01) மற்றும் இரண்டு சந்தேக நபர்களை (02) கைது செய்தனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) ஒன்று வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜயா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படையின் சிறப்புக் கப்பலினால் அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இருபது (20) பைகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு (01) டிங்கி ஆகியன கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கல்பிட்டி, ஜனசவிபுர மற்றும் சிங்கபுர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.