சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்று மன்னார் தெற்கு கடல் பிரதேசத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி அன்று இரவு மன்னார் தெற்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினான்கு (14) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நாட்டு கடல் எல்லையைத் தாண்டி உள்நாட்டு கடற்பரப்பிற்குல் வெளிநாட்டு மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்து, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2025 மார்ச் 06 ஆம் திகதி அன்று இரவு மன்னார் தெற்கு கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வட மத்திய கடற்படை கட்டளையினால் அவதானிக்கப்பட்டு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையானது, கடற்படையின் கரையோர காவல்படையினரின் படகுகளை அனுப்பி மேற்கொள்ளப்பட்டது. அங்கு, மேலும் இலங்கை கடற்பரப்பிற்குல் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிக் படகொன்றிற்குள் (01) கடற்படையினர் சட்டப்பூர்வமான முறையில் சோதனை செய்து, குறித்த இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினான்கு (14) பேரை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) மற்றும் அங்கிருந்த பதினான்கு (14) இந்திய மீனவர்கள் மன்னார் தால்பாடு இரங்கு துறைக்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீனவ ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ளனர்.