சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 426 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி இரவு கல்பிட்டி கருவலக்குடா மற்றும் சின்னஅரிச்சாய் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற நானூற்று இருபத்தி ஆறு (426) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு சொந்தமான விசேட கப்பல் படையணி, 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி திகதி இரவு கல்பிட்டி கருவலக்குடா மற்றும் சின்னஅரிச்சாய் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் அவதானித்து பரிசோதிக்கப்பட்டன. அங்கு, குறித்த இரண்டு டிங்கி படகுகளில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற பதினான்கு (14) பைகளில் அடைக்கப்பட்ட நானூற்று இருபத்தி ஆறு (426) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 முதல் 43 வயதுக்குட்பட்ட கல்பிட்டி தோரையடி மற்றும் சின்னக்குடியிருப்பு பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கிகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.