கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி
இலங்கைக்கு தெற்கு ஆழ்கடலில், காலியில் இருந்து 43 கடல் மைல் (சுமார் 79 கி.மீ) தொலைவில் சுகவீனமடைந்த, மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று இன்று (2025 பெப்ரவரி 06) சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.
2025 ஜனவரி 02 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடிக்கப்பலான ‘Sadue Putha 04’ (பதிவு எண். IMUL-A-0654 CHW),காலியில் இருந்து 43 கடல் மைல் (சுமார் 79 கி.மீ) தொலைவில் இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது, மீனவர் ஒருவர் சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையினரை உதவுமாறு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
இந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் படகொன்று கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டது. இதன்படி, 2025 பெப்ரவரி 05 இரவு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை வேகத் தாக்குதல் படகில் ஏற்றிச் சென்ற கடற்படையினர், மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக இன்று (2025 பெப்ரவரி 06) காலை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை ஆயத்தமாக உள்ளது.