சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற விலங்குகள் மற்றும் மருந்துகளுடன் மூவர் மன்னாரில் கைது
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் 2025 பெப்ரவரி 04 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற புறாக்கள் (PIGIONS) , ஆபிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த நிறுவனமும் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப்பிரிவும் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பேசாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த லொறி ஒன்று சோதனையிடப்பட்டது. லொறியில் 220 புறாக்கள், 20 ஆபிரிக்க காதல் பறவைகள், 08 பறக்கும் அணில்கள் மற்றும் 30 மருந்து மாத்திரைகள், மருந்து திரவங்கள் அடங்கிய 40 போத்தல்கள், லொறி மற்றும் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பில் வசிக்கும்’ 25 மற்றும் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட விலங்குகள், லொறி மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.